யத3க்3ரே சா1னுப3ன்தே4 ச1 ஸுக2ம் மோஹனமாத்1மன: |
நித்3ராலஸ்யப்1ரமாதோ3த்1த2ம் த1த்1தா1மஸமுதா3ஹ்ருத1ம் ||39||
யத்--—எது; அக்ரே—--ஆரம்பத்தில் இருந்து; ச--—மற்றும்; அனுபந்தே--—இறுதி வரை;ச--—மற்றும்; ஸுகம்--—மகிழ்ச்சி; மோஹனம்—--மாயை; ஆத்மனஹ—தன்னுடைய; நித்ரா—--தூக்கம்; ஆலஸ்ய--—சோம்பல்; ப்ரமாத--—அலட்சியம்;உத்தம்--—உருவான; தத்--—அது; தாமஸம்--—அறியாமை முறையில்; உதாஹ்ரிதம்--—என்று கூறப்படுகிறது
BG 18.39: சுயத்தின் இயல்பை ஆரம்பம் முதல் இறுதி வரை மறைத்து, உறக்கம், சோம்பல், அலட்சியம் ஆகியவற்றிலிருந்து உருவான அந்த மகிழ்ச்சி, அறியாமை முறையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆரம்பம் முதல் இறுதி வரை முட்டாள்தனமான அறியாமையில் ஊன்றிய மகிழ்ச்சி மிகக் குறைவானது. அது ஆன்மாவை அறியாமையின் இருளில் தள்ளுகிறது. இருப்பினும், அதில் ஒரு சிறிய இன்ப அனுபவம் இருப்பதால், மக்கள் அதற்கு அடிமையாகிறார்கள். அதனால்தான், புகைப்பிடிப்பவர்கள் அது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தாலும் கூட தங்கள் பழக்கத்தை முறித்துக் கொள்வதை கடினமானதாக உணருகிறார்கள். பழக்கத்தின் அடிமைத்தனத்திலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியை அவர்களால் மறுக்க முடிவதில்லை. உறக்கம், சோம்பல் மற்றும் அலட்சியம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட இத்தகைய இன்பங்கள் அறியாமையின் முறையில் உள்ளன என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.
யத3க்3ரே சா1னுப3ன்தே4 ச1 ஸுக2ம் மோஹனமாத்1மன: |
நித்3ராலஸ்யப்1ரமாதோ3த்1த2ம் த1த்1தா1மஸமுதா3ஹ்ருத1ம் ||39||
சுயத்தின் இயல்பை ஆரம்பம் முதல் இறுதி வரை மறைத்து, உறக்கம், சோம்பல், அலட்சியம் ஆகியவற்றிலிருந்து உருவான அந்த மகிழ்ச்சி, அறியாமை முறையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!